தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் நாளை (02.08.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...

Published On 2025-08-01 07:36 IST   |   Update On 2025-08-01 07:36:00 IST
  • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
  • சப்தகிரி நகர், பாண்டியன் நகர், லட்சுமிபுரம், மாருதி அவென்யூ.

சென்னை:

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (02.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

ஆவடி: சப்தகிரி நகர், பாண்டியன் நகர், லட்சுமிபுரம், மாருதி அவென்யூ, அசோக் நிரஞ்சன் நகர், ஸ்ரீ ராம் நகர், மூர்த்தி நகர், டிஎன்எச்பி, ஆதிபராசக்தி நகர், தீயணைப்பு நிலைய சாலை, பருத்திப்பட்டு, காமராஜர் நகர், வசந்தம் நகர், ஜேபி எஸ்டேட், ஜீவா நகர், சங்கர் நகர், புட் வனகிரி, என்.எம். ஆனந்தன் நகர்.

வேளச்சேரி: வெங்கடேஸ்வரா நகர், எம்ஜிஆர் நகர், பைபாஸ் ரோடு, தேவி கருமாரியம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகு நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், ராம் நகர், நேரு நகர், தண்டீஸ்வரம் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, 100 அடி சாலை, ராஜலட்சுமி நகர், தபதி அம்மான் தெரு, ஜெகந்நாதபுரம், த.ப. செல்வா நகர், சீதாராமன் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, தரமணி மற்றும் பேபி நகர்.

கொட்டிவாக்கம்: ஜர்னலிஸ்ட் காலனி, லட்சுமண பெருமாள் நகர் 1 முதல் 6வது தெரு, ராஜா கார்டன், ராஜா கல்யாணி தெரு, குப்பம் ரோடு, நியூ காலனி 1 முதல் 3வது தெரு, கற்பகம்பாள் நகர் 1 முதல் 3வது தெரு, ஸ்ரீனிவாசபுரம் 1வது, 2வது தெரு, நஜீமா அவென்யூ, திருவள்ளுவர் 3-வது தெரு, திருவள்ளுவர் நகர் 2 முதல் 7வது மெயின் ரோடு, காவேரி நகர் 1 முதல் 6வது தெரு, பேவாட்ச் பவுல்வர்டு, வள்ளலார் நகர், கொட்டிவாக்கம் குப்பம் 1வது தெரு, ஹவுசிங் போர்டு அபார்ட்மெண்ட்ஸ் தென்றல் எச்43 முதல் எச்50, மற்றும் முல்லை எச்70 முதல் எச்78 பிளாட் வரை.

பூந்தமல்லி: கோல்டன் ஹோம்ஸ் FDR 1,2, மற்றும் காடுவெட்டி ஆவடி ரோடு.

Tags:    

Similar News