தமிழ்நாடு செய்திகள்

GPS மூலம் சுங்கக் கட்டணம்- மத்திய அரசு விளக்கம்

Published On 2025-04-18 14:41 IST   |   Update On 2025-04-18 14:41:00 IST
  • மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகமும், நெடுஞ்சாலை ஆணையமும் எந்த முடிவும் எடுக்கவில்லை.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் மட்டும் NPR-FASTag- அடிப்படையிலான தடையற்ற கட்டண நடைமுறை.

வரும் மே 1ம் தேதி முதல் நாடு தழுவிய செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் நடைமுறை குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து கூறியபோது, " செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகமும், நெடுஞ்சாலை ஆணையமும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் மட்டும் NPR-FASTag- அடிப்படையிலான தடையற்ற கட்டண நடைமுறையில் இருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News