தமிழ்நாடு செய்திகள்

மாணவர்களை "ஜெய்ஸ்ரீராம்" என கோஷமிட வைத்து சர்ச்சையில் சிக்கிய ஆளுநர்

Published On 2025-04-12 18:33 IST   |   Update On 2025-04-12 18:33:00 IST
  • பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
  • ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலால் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

மதுரை தியாகராஜர் கல்லூரி விழாவில் மாணவர்களிடையே ஜெய்ஸ்ரீராம் என ஆளுநர். ஆர்.என்.ரவி கோஷம் எழுப்ப வைத்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கல்விக் கூடங்களில் கம்பர் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

அப்போது, நான் சொல்கிறேன்; நீங்களும் திரும்ப செல்லுங்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டார்.

மதச்சார்பற்ற கல்வி நிறுவனத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களையும் ஜெய்ஸ்ரீராம் என கோஷம் போட வைத்ததால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஆளுநருக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

Tags:    

Similar News