தமிழ்நாடு செய்திகள்

சாதி பெயர்களில் மாற்றம் வேண்டும்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் திருமாவளவன் கோரிக்கை

Published On 2025-10-14 17:15 IST   |   Update On 2025-10-14 17:15:00 IST
  • சாதி பெயர்களில் உள்ள 'ன்' எழுத்தை நீக்கி 'ர்' சேர்க்க வேண்டும்.
  • இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் சந்தித்து பேசினார். அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச் செல்வன், எஸ்.எஸ். பாலாஜி, ஜெ. முகம்மது ஷா நவாஸ், எம். பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது சாதி பெயர்களில் உள்ள 'ன்' எழுத்தை நீக்கி 'ர்' சேர்க்க வேண்டும் என முதலமைச்சரிடம் வி.சி.க. தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

அத்துடன் தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு நன்றி கூறியதுடன் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News