தமிழ்நாடு செய்திகள்

மங்களூருவில் இந்து அமைப்பை சேர்ந்த நபர் வெட்டி கொலை- 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

Published On 2025-05-02 16:59 IST   |   Update On 2025-05-02 16:59:00 IST
  • சுஹாஸ் என்பவர் குற்றவியல் வழக்குகளில் சந்தேகத்தின் பேரில் இருந்தவர்.
  • சுஹாஸ் ஷெட்டி இறுதி ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம், மங்களூருவில் இந்து அமைப்பை சேர்ந்த சுஹாஸ் வெட்டி என்பவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், மங்களூர் நகர் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சுஹாஸ் ஷெட்டி என்பவர் குற்றவியல் வழக்குகளில் சந்தேகத்தின் பேரில் இருந்தவர். சுஹாஸ் ஷெட்டி இறுதி ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர்.

பதற்றம் காரணமாக மங்களூருவில், மே 6-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News