தமிழ்நாடு செய்திகள்

பயணிகளின் வசதிக்காக மதுரை-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில்

Published On 2025-07-15 07:46 IST   |   Update On 2025-07-15 07:46:00 IST
  • பயணிகளின் வசதிக்காக மதுரை-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
  • சிறப்பு ரெயிலில் 10 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை:

மதுரை கோட்ட ரெயில்வேயில் நடக்கும் தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஈரோடு-செங்கோட்டை ரெயில் (வ.எண்.16845/16846) திண்டுக்கல்லுடன் நிறுத்தப்படுவதால், பயணிகளின் வசதிக்காக மதுரை-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06846) வருகிற 18-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை செங்கோட்டையில் இருந்து அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06845) வருகிற 17-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை மதுரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த சிறப்பு ரெயிலில் 10 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News