தமிழ்நாடு செய்திகள்

கேண்டி கிரஷ்-ஐ ஆன்லைன் ரம்மியோடு ஒப்பிடுவதா?- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

Published On 2025-04-04 16:44 IST   |   Update On 2025-04-04 16:44:00 IST
  • ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தனிநபர் மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பமும் சமூகமும் பாதிப்பு.
  • ஆன்லைன் ரம்மியை ஒழுங்குப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஒழுங்குப்படுத்துவது அரசின் பொறுப்பும் கூட.

ஆன்லைன் விளையாட்டுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்ததை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் பின்வருமாறு:-

* ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தனிநபர் மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பமும் சமூகமும் பாதிப்பு.

* ஆன்லைன் ரம்மியை ஒழுங்குப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஒழுங்குப்படுத்துவது அரசின் பொறுப்பும் கூட.

* விளையாடுபவர்களின் விவரங்களை கேட்பதால் அந்தரங்க உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது

* கேண்டி கிரஷ் உள்ளிட்ட விளையாட்டுகளோடு ஆன்லைன் ரம்மியை ஒப்பிடுவது தவறு.

இவ்வாறு தமிழக அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

Tags:    

Similar News