தமிழ்நாடு செய்திகள்
தொடர் மழை... செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- 3.64 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 2.8 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.
- ஏரியின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
அந்த வகையில், சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 1,800 கன அடியாக இருந்த ஏரிக்கான நீர்வரத்து தற்போது விநாடிக்கு 2,170 கனஅடியாக அதிகரித்துள்ளது. 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20.84 அடியாக உயர்ந்துள்ளது.
3.64 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 2.8 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.