தமிழ்நாடு செய்திகள்

இந்தி கற்றே ஆக வேண்டும் என வலிந்து திணிப்பது ஏன்?- சீமான்

Published On 2025-02-18 11:07 IST   |   Update On 2025-02-18 11:07:00 IST
  • மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவேன் என்பது திமிர்தனமாக தான் தெரிகிறது.
  • உலகம் முழுவதும் மொழி வழியே தான் தேசிய இனங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

அவதூறு வழக்கு விசாரணைக்காக விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவேன் என்பது திமிர்தனமாக தான் தெரிகிறது.

* ஒரே மொழி என்பது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது.

* இந்தி கற்றே ஆக வேண்டும் என வலிந்து திணிப்பது ஏன்?

* உலகம் முழுவதும் மொழி வழியே தான் தேசிய இனங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

* மற்ற மொழிகளை கற்பது என் விருப்பம். கட்டாயம் பிற மொழிகளை கற்க வேண்டும் என வற்புறுத்துவது ஏன்?

* எங்களின் அடையாளமாக உள்ள எங்கள் தாய் மொழியை அழித்து நாடோடி கூட்டமாக அலையவிடப் போகிறீர்களா? என்று கூறினார்.

Tags:    

Similar News