தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ. அறிவிப்பு

Published On 2025-04-19 10:48 IST   |   Update On 2025-04-19 10:48:00 IST
  • பா.ஜ.க.வை எதிர்க்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கத்தான் செய்கிறது.
  • பா.ஜ.க.வை தனிமைப்படுத்த வேண்டும், விலக்கிவிட வேண்டும்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் அ.தி.மு.க.வுடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:

* பா.ஜ.க. கட்சியுடன் கூட்டணி வைத்த எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது.

* பா.ஜ.க.வை எதிர்க்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கத்தான் செய்கிறது. பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளை எஸ்.டி.பி.ஐ. கட்சி அங்கீகரிக்காது.

* தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்பதே பா.ஜ.க.வின் முழக்கமாக இருந்தது ஆனால் திராவிட கட்சி மேலே சவாரி செய்ய வந்திருக்கிறார்கள் இப்போது முழக்கம் எங்கே போனது?

* அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைக்க எவ்வளவு பெரிய நிர்ப்பந்தம் கொடுத்து நேரம் கொடுத்து எத்தனை வாய்ப்புகள் கொடுத்தார்கள் என்று அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரியும்.

* பா.ஜ.க.வுக்கு இது கைவந்த கலை, தனக்கு கட்டுப்பட்டுத்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார்கள்.

* நீதி, நேர்மை, நியாயம் அனைத்தையும் துறந்து சாணக்கிய தத்துவ அடிப்படையில் எந்த எல்லைக்குப் போவார்கள், அந்த அடிப்படையில் அ.தி.மு.க.வை கபளீகரம் செய்திருக்கிறார்கள்.

* பா.ஜ.க.வை பொறுத்தவரையில் தனக்குச் சாதகமாக வேண்டுமென்றால் யார் காலிலும் விழுவார்கள் தனக்குத் தேவையில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள் அதுதான் அவர்களின் நிலைப்பாடு.

* எங்கெல்லாம் பா.ஜ.க. அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து இருக்கிறதோ அங்கு இருக்கக்கூடிய மாநிலக் கட்சிகளுடன் அழிந்துபோனதாகத் தான் வரலாறு இருக்கிறது.

* அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது. அந்த வழியில் தமிழ்நாடு ஒரு அரசியல் கட்சியை இழக்கப்போகிறது என்பது உண்மை

* இந்த முடிவை அ.தி.மு.க. மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

* பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து கதவுகளையும் சாத்திவிட்டதால் வாசலில் படுத்துக் கிடந்தார்கள், எந்த வாசலாவது திறக்காதா, எந்த ஜன்னல் ஆவது திறக்காதா என பா.ஜ.க. தவம் கிடந்தார்கள்.

* இப்போது நிர்ப்பந்தம் நெருக்கடியில் கூட்டணியை நோக்கி மிதந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது

* அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விடுவித்து, கட்சியையும் தொண்டர்களைப் பாதுகாக்க வேண்டும்.

* பா.ஜ.க.வை தனிமைப்படுத்த வேண்டும், விலக்கிவிட வேண்டும்.

* தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பா.ஜ.க.வை வெறுக்கிறார்கள். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியில் வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

* நாங்கள் நிச்சயமாக ஒரு கூட்டணிக் கட்சியில் இருப்போம், எந்த கட்சி என்பது குறித்து 9 மாதத்திற்குள் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News