தமிழ்நாடு செய்திகள்

சென்னை தி.நகரில் பிரபல ஜவுளிக்கடையில் ரூ.9 லட்சம் கொள்ளை

Published On 2025-02-17 20:12 IST   |   Update On 2025-02-17 20:12:00 IST
  • ஃபால் சீலிங்கை உடைத்து உள்ளே குதித்து கொள்ளையர்கள் கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்றனர்.
  • 3 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என மாம்பலம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை தி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பூட்டை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

4வது மாடியில் உள்ள ஃபால் சீலிங்கை உடைத்து உள்ளே குதித்து கொள்ளையர்கள் கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்றனர்.

3 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என மாம்பலம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிசிடிவி கேமரா பதிவு அடிப்படையில் 3 கொள்ளையர்களை பிடிக்க மாம்பலம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தி.நகரில் பிரபல ஜவுக்கடையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News