தமிழ்நாடு செய்திகள்

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானம்- அனைத்து கட்சிகளும் ஆதரவு

Published On 2024-12-09 12:40 IST   |   Update On 2024-12-09 12:40:00 IST
  • அரிட்டாப்பட்டி பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
  • மத்திய பாஜக அரசின் சதியை முறியடிப்போம் என்று வேல்முருகன் கூறினார்.

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

அரிட்டாப்பட்டி பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. வரலாற்று சின்னங்களை அழிக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது. சுரங்கம் அமைப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என்று அப்துல் சமது கூறினார்.

தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று எம்எல்ஏ ஈஸ்வரன் கூறினார்.

அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய பாஜக அரசின் சதியை முறியடிப்போம் என்று வேல்முருகன் கூறினார்.

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது வரலாற்று சின்னங்களை அழிக்கும் நோக்கம் கொண்டது என்று சிந்தனை செல்வன் கூறினார்.

Tags:    

Similar News