தமிழ்நாடு செய்திகள்
சென்னை மற்றும் புறநகரில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை!
- சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
- செங்கல்பட்டு, திருநின்றவூர், நன்மங்கலம், தாம்பரம் உள்பட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநரில் பரவலாக மழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், அரும்பாக்கம், கிண்டி, சைதப்பேட்டை, கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர், வளசரவாக்கம், ஈக்காட்டுத்தாங்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், வாகனகரம், மதுரவாயல், திருவேற்காடு, பூவிருந்தவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
மேலும்,செங்கல்பட்டு, திருநின்றவூர், நன்மங்கலம், தாம்பரம் உள்பட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
விழுப்புரத்தில் முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.