வி.சி.க. நிர்வாகி இடத்தில் கள்ளநோட்டு அச்சடிப்பு- போலீசார் விசாரணை
- சோதனையில் ரூ.85,000 கள்ளநோட்டுகள், வாக்கி டாக்கிகள், ஏர்கன், பிஸ்டல் ஏர்கன், கவுன்டிங் மிஷின் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
- விளைநிலத்தில் தற்காலிகமாக செட் அமைத்து கள்ளநோட்டுகள் அச்சடித்த கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் அதர்நத்தம் கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வம் விளைநிலத்தை வாடகைக்கு எடுத்த நபர்கள் அங்கு கள்ளநோட்டுகள் அச்சடித்துள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு அதிரடியாக நுழைந்து போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையில் ரூ.85,000 கள்ளநோட்டுகள், வாக்கி டாக்கிகள், ஏர்கன், பிஸ்டல் ஏர்கன், கவுன்டிங் மிஷின் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
சம்பவ இடத்தில் காவல்துறை சீருடை, ரிசர்வ் வங்கி முத்திரை உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளைநிலத்தில் தற்காலிகமாக செட் அமைத்து கள்ளநோட்டுகள் அச்சடித்த கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
நிலத்தின் உரிமையாளரான வி.சி.க. நிர்வாகி செல்வம் தலைமறைவானதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.