தமிழ்நாடு செய்திகள்

பொது இடங்களில் மது அருந்துவோரை கண்டுகொள்ளாத போலீஸ் - டி.ஜி.பி.க்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

Published On 2025-08-12 09:06 IST   |   Update On 2025-08-12 09:06:00 IST
  • அனுமதிக்கப்பட்ட மதுபானக் கூடத்தில்தான் மது பிரியர்கள் மது அருந்தவேண்டும்.
  • பொதுஇடங்களில் யாராவது மது அருந்தினால், அவர்கள் மீது சட்டப்படி போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், அரியலூரைச் சேர்ந்த ராமசாமி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''பொது இடங்களில் மது அருந்துபவர்களால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய இடையூறு ஏற்படுகிறது. இதை தடுக்க போலீசாருக்கு தகுந்த உத்தரவை எடுக்கவேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். பின்னர், ''அனுமதிக்கப்பட்ட மதுபானக் கூடத்தில்தான் மது பிரியர்கள் மது அருந்தவேண்டும். பொதுஇடங்களில் யாராவது மது அருந்தினால், அவர்கள் மீது சட்டப்படி போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். பொது இடங்களில் மது அருந்துவோரினால் பாதிக்கப்படும் மக்கள் எளிதில் புகார் தெரிவிக்க வசதியாக ஒவ்வொரு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தங்களது செல்போன் எண், இ-மெயில், வாட்ஸ்ஆப் எண் ஆகியவற்றை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். பொது இடங்களில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரிகள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கையை டி.ஜி.பி. எடுக்கவேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News