தமிழ்நாடு செய்திகள்

குற்றச்சம்பவங்களை தடுக்க திருப்பூரில் போலீசார் அதிரடி சோதனை

Published On 2025-04-12 13:49 IST   |   Update On 2025-04-12 13:49:00 IST
  • திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்ளை தடுக்க மாநகர போலீசாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
  • வாகன சோதனையின்போது வாகன ஓட்டுனர் பெயர், வாகன எண் ஆகியவை பதிவு செய்யப்படுகிறது.

திருப்பூர்:

திருப்பூரில் பனியன் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. பனியன் நிறுவனங்களில் பணியாற்ற வெளிமாவட்டம் மற்றும் வடமாநில தொழிலாளிகள் ஏராளமானோர் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்புத்தாண்டு கொண்டாட திருப்பூரில் தங்கி வேலை செய்யும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் பல்வேறு பகுதிகளில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்ளை தடுக்க மாநகர போலீசாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகரின் முக்கிய பகுதிகளில் நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாகன சோதனையின்போது வாகன ஓட்டுனர் பெயர், வாகன எண் ஆகியவை பதிவு செய்யப்படுகிறது. அதேபோல் முறையான ஆவணங்கள் இல்லாமல் வரும் இருசக்கர வாகனம், தலைக்கவசம் இல்லாமல் வருபவர்கள் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News