தமிழ்நாடு செய்திகள்
தடையை மீறி பா.ம.க. போராட்டம் அறிவிப்பு- போலீசார் குவிப்பு
- சௌமியா அன்புமணி தலைமையில் அறிவிக்கப்பட்ட போராட்டத்திற்கு நுங்கம்பாக்கம் போலீசார் அனுமதி மறுத்தனர்.
- பா.ம.க.வினர் போராட வந்தால் உடனடியாக கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதை கண்டித்து பா.ம.க. மகளிரணி சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பா.ம.க. சார்பாக சவுமியா அன்புமணி தலைமையில் அறிவிக்கப்பட்ட போராட்டத்திற்கு நுங்கம்பாக்கம் போலீசார் அனுமதி மறுத்தனர்.
இந்நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க. அறிவித்துள்ள நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பா.ம.க.வினர் போராட வந்தால் உடனடியாக கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.