தமிழ்நாடு செய்திகள்

ஆகஸ்ட் மாதம் மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

Published On 2025-07-30 11:51 IST   |   Update On 2025-07-30 11:51:00 IST
  • சிதம்பரம் நடராஜன் கோவிலில் இருந்து மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நேரலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
  • செப்டம்பர் மாத இறுதியிலும் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக கடந்த 26-ந்தேதி இரவு தமிழகம் வந்தார். அப்போது, தூத்துக்குடி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தையும், மறுநாளான 27-ந்தேதி கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டு ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி அடுத்த மாதம் 26-ந்தேதி மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 26-ந்தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் மாவட்டத்திற்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

சிதம்பரம் நடராஜன் கோவிலில் இருந்து மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நேரலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். மேலும் செப்டம்பர் மாத இறுதியிலும் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக கூறப்படுகிறது. 

Tags:    

Similar News