தமிழ்நாடு செய்திகள்

ரெயில் நிலையத்தில் பூக்கடைக்கு அனுமதி- மதுரை மல்லிகை விற்பனை படுஜோர்

Published On 2025-04-30 14:51 IST   |   Update On 2025-04-30 14:51:00 IST
  • ரெயில் நிலையத்தில் குளிர்சாதன பெட்டியில் வைத்து மல்லிகைப்பூ விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • மதுரை மல்லிகை பூவை ரெயில் பயணிகள் வாங்கும் வகையில் ரெயில் நிலையத்தில் ஏற்பாடு.

மதுரை ரெயில் நிலையத்தில் முதன்முறையாக பூக்கடைக்கு தெற்கு ரெயில்வே அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, மதுரை ரெயில் நிலையத்தில் மதுரையின் பிபலமாக மல்லிகைப்பூ விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் குளிர்சாதன பெட்டியில் வைத்து மல்லிகைப்பூ விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரெயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது.

அதன்படி, மிகவும் பிரபலமான மதுரை மல்லிகை பூவை ரெயில் பயணிகள் வாங்கும் வகையில் ரெயில் நிலையத்தில் விற்பனை தொடங்குகிறது.

இதனால், மதுரைக்கு வரும் மக்கள் ஊரின் சிறப்பம்சமான மதுரை மல்லிகையை சிரமமின்றி வாங்க மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

Tags:    

Similar News