தமிழ்நாடு செய்திகள்

திரௌபதி அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் வழிபட மீண்டும் எதிர்ப்பு...

Published On 2025-04-17 08:00 IST   |   Update On 2025-04-17 08:00:00 IST
  • திரௌபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று அம்மனை மகிழ்ச்சியுடன் வழிபட்டனர்.
  • ஒருதரப்பினரிடம் நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுரை வழங்கினர்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே உள்ள மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, இருதரப்பினரும் சென்று வழிபட இன்று அதிகாலை முதல் கோவில் திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து பட்டியலின மக்கள் வழிபாடு செய்து வந்தனர்.

இந்த நிலையில், திரௌபதி அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் வழிபட மற்றொரு தரப்பினர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஒருதரப்பினரிடம் நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுரை வழங்கினர். இருப்பினும் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, திரௌபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று அம்மனை மகிழ்ச்சியுடன் வழிபட்டனர். 

Tags:    

Similar News