வைகோ குற்றச்சாட்டுக்கு ஓ. பன்னீர் செல்வம் பதில்
- ஜெயலலிதா என்ன சொல்வாரோ அதை மட்டும்தான் பேசி இருக்கிறேன்.
- நான் பதில் கூற வேண்டும் என வைகோ விரும்பினால் அதற்கு பதில் கூறுவேன்.
2011-ம் ஆண்டில் அதிமுக கூட்டணியில் மதிமுக-வுக்கு 12 இடங்கள் தான் தருவோம் என கூறினார்கள். ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
நான் அதிமுக கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை என ஜெயலலிதாவிடம் கூறியிருக்கிறார்கள். கூட்டணிக்கு மதிமுக வர தயாராகவில்லை என ஜெயலலிதாவிடம் தவறாக கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
ஜெயலலிதா 15 தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் தர தயாராக இருந்தது பின்னர்தான் எனக்கு தெரியவந்தது. அப்போது ஓ.பி.எஸ். செய்த தவறுக்காகத்தான் அதன் பலனை தற்போது அனுபவித்து கொண்டு இருக்கிறார் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக ஓ. பன்னீர் செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஓ. பன்னீர் செல்வம் "ஜெயலலிதா என்ன சொல்வாரோ அதை மட்டும்தான் பேசி இருக்கிறேன். நான் பதில் கூற வேண்டும் என வைகோ விரும்பினால் அதற்கு பதில் கூறுவேன். வை.கோ.வின் மனம் புண்படும் என்பதால் அதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை. 14 ஆண்டுகளுக்குப் பிறகு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இதை பேசுவது ஏன்?" எனப் பதில் அளித்தார்.