தமிழ்நாடு செய்திகள்

அரபிக்கடலில் புதிய காற்றழுத்தம் - வானிலை ஆய்வு மையம்

Published On 2025-05-20 12:33 IST   |   Update On 2025-05-20 12:33:00 IST
  • நாளை மேல்காற்று சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது.
  • குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால் மத்தியகிழக்கு அரபிக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். நாளை மேல்காற்று சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்தம் உருவாகலாம்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News