தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருமா? - எம்.எல்.ஏ. அருள் பேட்டி

Published On 2025-09-01 14:55 IST   |   Update On 2025-09-01 14:55:00 IST
  • டாக்டர் அன்புமணிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பட்டுள்ளது.
  • அன்புமணி ராமதாஸ் டாக்டர் ராமதாசை சந்தித்து அவர் சொல்வதை கேட்டு செயல்தலைவராக செயல்படுவேன் என கூற வேண்டும்.

திண்டிவனம்:

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள வந்த பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் சேலம் அருள் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

டாக்டர் அன்புமணிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் பதில் அளித்திருக்கிறாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. இது குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் 9 பேருடன் இன்று தைலாபுரத்தில் கூட்டம் நடைபெறுகிறது.

இதில் 9 நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு கட்சியின் நிறுவன தலைவர் ராமதாசிடம் ஒப்படைத்த பின்னர் அவர் முடிவு செய்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரிடம் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வரும் என்று கூறி வருகிறாரே என்ற கேள்விக்கு, டாக்டர் ராமதாஸ் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவோம். அவர் எந்த கூட்டணியில் அங்கம் வைக்க முடிவு செய்கிறாரோ அந்த கூட்டணி தான் வெற்றி பெறும். அவர்கள் தான் அடுத்து ஆட்சி அமைப்பார்கள். மக்கள் எதிர்பார்க்கும் கூட்டணியை ராமதாஸ் வைப்பார் என தெரிவித்தார்.

அன்புமணி ராமதாஸ் டாக்டர் ராமதாசை சந்தித்து அவர் சொல்வதை கேட்டு செயல்தலைவராக செயல்படுவேன் என கூற வேண்டும் என பா.ம.க. தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.அந்த நாளுக்காக காத்திருப்பதாகவும் வெகு விரைவில் அது நடைபெறும் என அருள் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

Tags:    

Similar News