சிறுதானியங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் - மு.க.ஸ்டாலின்
- கரும்பு உற்பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாடு 2-ம் இடம் வகிக்கிறது.
- உழவு என்பது தொழில் மட்டுமல்ல, நம் பண்பாடு.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ரூ.15.70 கோடி செலவில் 16 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.159.53 கோடி மதிப்பீட்டில் 11 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். ரூ.25.41 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 4,524 பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து பெருந்துறையில் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் 2 நாட்கள் நடைபெறும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* சிறுதானிய உற்பத்தியில் தமிழ்நாடு தேசிய அளவில் முதலிடம்.
* கரும்பு உற்பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாடு 2-ம் இடம் வகிக்கிறது.
* டெல்டா பாசனத்திற்கான நீரை திறக்கும் முன் வேளாண் கண்காட்சியை தொடங்கியதில் மகிழ்ச்சி.
* பவானி ஆற்றில் 8 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
* ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு மேலும் திட்டங்கள் தருவோம்.
* உழவு என்பது தொழில் மட்டுமல்ல, நம் பண்பாடு.
* வேளாண்மையில் வளர்ச்சி பெற்ற முன்னோடிகளை கொண்டது ஈரோடு மாவட்டம்.
* டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறந்து வைக்க உள்ளேன்.
* முதல் முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை தி.மு.க. அரசு தாக்கல் செய்தது.
* கூட்டுறவுத்துறை மூலம் 81 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.62,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
* மண்ணுயிர் காத்து இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் 22 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.