தமிழ்நாடு செய்திகள்
கோட்சே கூட்டத்தின் பின்னால் மாணவர்கள் சென்றுவிடக்கூடாது - மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை
- மாணவர்களுக்கு அரசியல் புரிதல் என்பது அவசியம்.
- மாணவர்கள் சமூக அக்கறை கொண்டவர்களாக வளர வேண்டும்.
திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா ஆண்டின் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* இளம் மாணவர்களை சந்திக்கும்போது எனக்கு உற்சாகம் பிறந்து விடுகிறது.
* கல்லூரி நட்பு எப்போதும் தொடர வேண்டும். அது சமூகத்திலும் எதிரொலிக்கப்பட வேண்டும்.
* கல்விதான் ஒருவரின் நிலையான சொத்து.
* மாணவர்களுக்கு அரசியல் புரிதல் என்பது அவசியம்.
* மாணவர்கள் சமூக அக்கறை கொண்டவர்களாக வளர வேண்டும்.
* கோட்சே கூட்டத்தின் பின்னால் மாணவர்கள் சென்றுவிடக்கூடாது.
* காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என நமக்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன.
* நான் அரசியல் பேசவில்லை, மாணவர்களுக்கு அரசியல் புரிய வேண்டும் என்றுதான் பேசுகிறேன்.
* ஓரணியில் திரண்டால் தமிழகத்தை யாராலும் வெல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.