தமிழ்நாடு செய்திகள்

நெருக்கடிகளை தாண்டி சிறப்பான ஆட்சியை வழங்கி வரும் திராவிட மாடல் அரசு- மு.க.ஸ்டாலின்

Published On 2025-08-23 11:46 IST   |   Update On 2025-08-23 11:46:00 IST
  • பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்டோர் சமத்துவம், சமூகநீதி உள்ளிட்ட உயர்ந்த கொள்கைக்காக பாடுபட்டனர்.
  • மத்திய அரசு மாநில அரசுகளுடன் கருத்துக்கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறது.

சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய-மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* எல்லோரும் சமம் என்ற சமத்துவத்தின் அடிப்படையில் கல்வி உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும் என்பதே சமூகநீதி.

* பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்; யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலகளாவிய சிந்தனையை வலியுறுத்திய திருவள்ளுவர், கணியன் பூங்குன்றன் வாழ்ந்த மண் இது.

* பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்டோர் சமத்துவம், சமூகநீதி உள்ளிட்ட உயர்ந்த கொள்கைக்காக பாடுபட்டனர்.

* பெண்ணுரிமை, சுற்றுச்சூழல் உள்ளிட்டவற்றில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்.

* மத்திய அரசுக்கும் அதிக வருவாய் ஈட்டித்தரும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது, ஆனால் நமக்கான நிதிப்பகிர்வோ மிகவும் குறைவு.

* குறுகிய அரசியல் நோக்கத்துடன் தமிழ்நாட்டிற்கு குறைந்த அளவிலேயே நிதிப்பங்கீடு அளிக்கப்படுகிறது.

* மத்திய அரசு உரிய வரி பங்கை அளிக்காமல் குறுகிய மனதுடன் நடந்து வருகிறது.

* நான்கரை ஆண்டுகளாக பல நெருக்கடிகளை மீறி சிறப்பான ஆட்சியை திராவிட மாடல் அரசு வழங்கி வருகிறது.

* மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்கை காங்கிரஸ், வி.சி.க., இந்திய முஸ்லீம் லீக் கட்சிகளுடன் தி.மு.க.வும் சேர்ந்து கண்டித்தது.

* மத்திய அரசு மாநில அரசுகளுடன் கருத்துக்கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News