நீலகிரியின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது தி.மு.க. - மு.க.ஸ்டாலின்
- உதகையில் உள்ளவர்களை பார்த்தார் கொஞ்சம் பொறாமையாக தான் உள்ளது.
- கூடலூர் பகுதியில் 10,000 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
ஊட்டி:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்றும் நீலகிரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டார்.
இன்று 2-வது நாளாக நீலகிரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பணியை தொடர்ந்தார். ரூ.353 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மருத்துவ ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பார்வையிட்டார்.
இதையடுத்து அரசு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* மலைகளின் அரசியான உதகைக்கு வந்து இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
* திரும்பிய பக்கமெல்லாம் இயற்கை எழில் சூழ்ந்தது உதகை.
* கொளுத்தும் கோடை வெயிலுக்கு இதமாக ஊட்டியில் அரசு விழாவில் பங்கேற்கிறேன்.
* உதகையில் உள்ளவர்களை பார்த்தார் கொஞ்சம் பொறாமையாக தான் உள்ளது.
* நீலகிரியின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது தி.மு.க.
* தி.மு.க. ஆட்சியில் நீலகிரியின் வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* தி.மு.க. ஆட்சியில் தான் உதகை ஏரி புதுப்பிப்பு, சுற்றுலா மாளிகை, படுகர் நலச்சங்க கட்டடம், முதுமலை சரணாலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
* இந்தியாவே திரும்பி பார்க்கும் அறிவு சார்ந்த பாராளுமன்ற வாதி ஆ.ராசா
* நீலகிரி மக்களின் நெஞ்சுக்கு நெருக்கமானவராக இருக்கிறார் ஆ.ராசா.
* கூடலூர் பகுதியில் 10,000 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
* நான் உள்ளாட்சி அமைச்சராக இருந்தபோது நீலகிரிக்கு 3-வது குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.