தமிழ்நாடு செய்திகள்

அடிமட்ட தொண்டனை வைத்து அண்ணாமலையை தோற்கடித்துக் காட்டுவோம்- சேகர்பாபு

Published On 2025-02-20 10:28 IST   |   Update On 2025-02-20 10:28:00 IST
  • கோவில்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படுவதால் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
  • ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு அது முடியாத காரணத்தால் ஏதோ பேசிக்கொண்டு தான் இருப்பார்கள்.

சென்னை கொளத்தூரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* திருக்கோவில்களில் வழங்கப்படும் அன்னதானத்திற்கு ஆண்டிற்கு ரூ.112 கோடி செலவாகிறது. 3.50 கோடி பேர் பயனடைகின்றனர்.

* கோவில்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படுவதால் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

* நலத்திட்டங்கள் நடைபெறுவதும், நாளுக்கு நாள் கோவில்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதும் அண்ணாமலை போன்றோருக்கு வயிற்றெரிச்சலை கிளப்பாமல் இருக்குமா?

* ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு அது முடியாத காரணத்தால் ஏதோ பேசிக்கொண்டு தான் இருப்பார்கள்.

* எங்கள் இயக்கம் அடிக்க அடிக்க உயரும் பந்து. தீட்ட தீட்ட ஒளி தரும் வைரம். காய்ச்ச காய்ச்ச மெருகேறும் சொக்கத்தங்கம். அதனால் அவர்கள் அடித்துக்கொண்டே இருக்கட்டும். எங்கள் இயக்க தோழர்கள் இன்னும் விறுவிறுப்போடு வீறுநடை போடுவார்கள்.

* 2026 சட்டசபை தேர்தலில் அண்ணாமலை வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக வரட்டும் பார்க்கலாம்.

* களத்திற்கு வாருங்கள். சாதாரண அடிமட்ட தொண்டனை நிற்க வைத்து அண்ணாமலையை தோற்கடித்துக் காட்டுவோம் என்று கூறினார்.

Tags:    

Similar News