தமிழ்நாடு செய்திகள்

அமைச்சர் ரகுபதிக்கு நெஞ்சுவலி- மருத்துவமனையில் அனுமதி

Published On 2025-01-25 14:50 IST   |   Update On 2025-01-25 15:19:00 IST
  • விமான நிலையம் வந்ததும் அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு நெஞ்சு வலித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
  • அடைப்பு காரணமாக அமைச்சர் ரகுபதிக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விமான நிலையம் வந்ததும் அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு நெஞ்சு வலித்ததால் உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சர் ரகுபதிக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதயத்தில் அடைப்பு காரணமாக அமைச்சர் ரகுபதிக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News