முதலமைச்சருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது இதனால் தான் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை சீராக உள்ளது.
- முதலமைச்சரின் உடல்நலம் குறித்து இன்று பிற்பகல் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்படும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட லேசான தலை சுற்றலை தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். மேலும் சில மருத்துவ பரிசோதனைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு பணிகளை தொடர்வதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை சீராக உள்ளது. முதலமைச்சரின் உடல்நலம் குறித்து இன்று பிற்பகல் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்படும்.
மு.க.முத்து இறப்பின் போது நாள் முழுவதும் நின்று கொண்டே இருந்தார். தொடர்ச்சியாக ஒன்றரை கிலோ மீட்டர் நடை பயணம் மேற்கொண்டதால் சோர்வடைந்தார் என்று கூறினார்.