தமிழ்நாடு செய்திகள்
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு
- 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் ரெயில்கள் 24 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
- ப்ளூ லைனில் மெட்ரோ ரெயில் சேவைகள் அட்டவணைப்படி இயங்குகின்றன.
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் - சென்ட்ரல் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு - அசோக் நகர் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 24 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் ரெயில்கள் 24 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரல் கோயம்பேடு, அசோக் நகர் - செயின்ட் தாமஸ் மவுண்ட் சேவையில் பாதிப்பில்லை. ப்ளூ லைனில் மெட்ரோ ரெயில் சேவைகள் அட்டவணைப்படி இயங்குகின்றன.
எனவே, பயணிகள் தங்கள் பயணத்தை அதற்கேற்ப திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.