தமிழ்நாடு செய்திகள்

மதுரை To சென்னை: இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டே ஆம்னி பஸ்சை ஓட்டிய டிரைவர்

Published On 2025-06-11 04:31 IST   |   Update On 2025-06-11 04:49:00 IST
  • "சாப்பிட்டுவிட்டு பேருந்தை ஓட்டலாமே?" என்று பயணி கேட்டார்.
  • "நேரமில்லை, இது எனக்குப் பழக்கம்" என்று பதிலளித்துள்ளார்.

மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சென்னைக்கு 40 பயணிகளுடன் புறப்பட்ட ஆம்னி பேருந்தின் ஓட்டுநர், பேருந்தை ஓட்டிக்கொண்டே உணவருந்தும் அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஓட்டுநர் ஸ்டியரிங்கின் நடுவில் உணவு பார்சலை வைத்துக்கொண்டு சாப்பிட்டபடி பேருந்தை இயக்கியுள்ளார்.

இதைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரு பயணி, "சாப்பிட்டுவிட்டு பேருந்தை ஓட்டலாமே?" என்று கேட்டதற்கு, ஓட்டுநர், "நேரமில்லை, இது எனக்குப் பழக்கம்" என்று பதிலளித்துள்ளார்.

இந்தப் பொறுப்பற்ற செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News