தமிழ்நாடு செய்திகள்

மதுரை மேயர் ராஜினாமா ஏற்பு - மாமன்றம் ஒப்புதல்

Published On 2025-10-17 11:13 IST   |   Update On 2025-10-17 11:13:00 IST
  • குடும்ப சூழ்நிலை காரணமாக மேயர் பதவியை ராஜினாமா செய்து இந்திராணி கடிதம் கொடுத்துள்ளார்.
  • தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்களின் ஆதரவுடன் ராஜினாமா ஏற்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி மேயராக தி.மு.க.வை சேர்ந்த இந்திராணி (வயது 45) இருந்து வந்தார். மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து மேயர் இந்திராணி நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இது குறித்து மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் கூறியபோது, குடும்ப சூழ்நிலை காரணமாக மேயர் பதவியை ராஜினாமா செய்து இந்திராணி கடிதம் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக துணை மேயர் தலைமையில் நடைபெறும் மாநகராட்சியின் அவசர கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் துணை மேயர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமாவுக்கு மாமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்களின் ஆதரவுடன் ராஜினாமா ஏற்கப்பட்டது. புதிய மேயர் தேர்வு செய்யப்படுவது தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News