தமிழ்நாடு செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது

Published On 2025-10-26 10:06 IST   |   Update On 2025-10-26 10:06:00 IST
  • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு- வடமேற்கு திசையில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
  • தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

சென்னை:

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு- வடமேற்கு திசையில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கு திசையில் 790 கி.மீ. தொலைவில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணிநேரத்தில் மோன்தா புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News