தமிழ்நாடு செய்திகள்

நெல்லையில் கேரள மருத்துவக் கழிவு- மேலும் 2 வழக்குகள் பதிவு

Published On 2024-12-21 10:25 IST   |   Update On 2024-12-21 10:25:00 IST
  • மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • இந்த வழக்கில் ஏற்கனவே 2 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்ட நிலையில் கேரள ஏஜெண்டுக்கு போலீசார் வலை.

நெல்லையில் கேரள மாநில மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், சுத்தமல்லி காவல் நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு பதிவு செய்யப்பட்டு, 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், முக்கூடல் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சீதற்பநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே 2 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்ட நிலையில் கேரள ஏஜெண்டுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.

Tags:    

Similar News