தமிழ்நாடு செய்திகள்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: அமைதிக்கான காரணம் இதுதான்- ராஜ் மோகன்
- வேதனையில் இருந்து மீள முடியவில்லை.. முடியாது என்றே தோன்றுகிறது.
- அவர்களின் வலியில் பங்கெடுத்துக் கொள்வதாலேயே இந்த அமைதி.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ராஜ் மோகன் கூறியிருப்பதாவது:-
வேதனையில் இருந்து மீள முடியவில்லை.. முடியாது என்றே தோன்றுகிறது. அதே சமயம் உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களின் வலியில் பங்கெடுத்துக் கொள்வதாலேயே இந்த அமைதி.
இந்த அமைதியை பயன்படுத்தி என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறுகளை, வதந்திகளை, வன்மங்களை, வெறுப்பை நம்ப வேண்டாம். அத்தனை கல்லடிகளையும் நான் தாங்க தான் வேண்டும்.
நீதிக்கான முன்னெடுப்புகள் நெடியது. பாதிக்கப்பட்டவர்களோடு வாழ்நாள் முழுக்க பயணிப்பதும் அவர்களுக்கு நீதி பெற்றுதருவதுமே 41 உயிர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. அதில் கவனம் செலுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.