தமிழ்நாடு செய்திகள்

முருகன் மாநாடு நடத்துவதன் மூலம் தமிழ்நாட்டில் பா.ஜ.க. கால் ஊன்ற முடியாது- கனிமொழி

Published On 2025-06-18 12:55 IST   |   Update On 2025-06-18 12:55:00 IST
  • திருமாவளவனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நல்ல நட்பில் இருக்கிறார்.
  • தமிழகத்தில் எப்போதுமே பா.ஜ.க கால் ஊன்ற முடியாது.

கன்னியாகுமரி:

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கன்னியாகுமரியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் வெகு காலமாக ஒன்றிணைந்து பயணிக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நல்ல நட்பில் இருக்கிறார். பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இப்போது முருகனை கையில் எடுத்து உள்ளோம். அடுத்து தமிழகத்தை கையில் எடுப்போம் என்று கூறி உள்ளார்.

தமிழகத்தில் எப்போதுமே பா.ஜ.க கால் ஊன்ற முடியாது. அது எக்காரணத்தைக் கொண்டும் நடக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கன்னியாகுமரி வந்த கனிமொழி எம்.பி.யை, அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சரும் தமிழக உணவு ஆணைய தலைவருமான சுரேஷ் ராஜன், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரைபாரதி, முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உள்பட பலர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

Tags:    

Similar News