தமிழ்நாடு செய்திகள்

இன்று 11 மாவட்டங்கள்... நாளை 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை

Published On 2025-10-26 14:06 IST   |   Update On 2025-10-26 14:06:00 IST
  • செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
  • நாளை மறுநாள் திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.

சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

* தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

* நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

* நாளை மறுநாள் திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News