தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 9,500 கனஅடியாக குறைந்தது

Published On 2025-09-16 09:15 IST   |   Update On 2025-09-16 09:15:00 IST
  • ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 16 ஆயிரம் கன அடி வந்தது.
  • சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

தருமபுரி:

கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 16 ஆயிரம் கன அடி வந்தது.

இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 9,500 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News