தமிழ்நாடு செய்திகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை

Published On 2025-06-03 19:43 IST   |   Update On 2025-06-03 19:43:00 IST
  • சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
  • பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

சென்னை:

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சென்ட்ரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், கோயம்பேடு, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், மாம்பலம், கிண்டி,ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

புறநகர் பகுதிகளான பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பூந்தமல்லி, குமணன்சாவடி, கரையான்சாவடி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

Tags:    

Similar News