தமிழ்நாடு செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து 60 சவரன் நகை கொள்ளை - காவலாளி தலைமறைவு

Published On 2025-05-15 08:49 IST   |   Update On 2025-05-15 08:49:00 IST
  • மகேஷ் குமார் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
  • நேபாளை சேர்ந்த ரமேஷ் மனைவி, குழந்தையுடன் வீட்டின் பின்புறம் வசித்து வந்த நிலையில் தலைமறைவாகி உள்ளார்.

சென்னை கொட்டிவாக்கத்தில் ஓய்வு பெற்ற ஐ.டி. ஊழியரான மகேஷ் குமார் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

மகேஷ் குமார் வீட்டிற்கு காவலாளியாக கடந்த மார்ச் மாதம் நேபாளத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் வேலைக்கு சேர்ந்து உள்ளார். காவலாளி ரமேஷ் அவரது குடும்பத்துடன் மகேஷ் குமார் வீட்டின் பின்புறம் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மகேஷ் குமார் தனது மனைவியுடன் வேலூரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று உள்ளார். கோவிலில் இருந்து திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவிலிருந்து 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

மகேஷ் குமார் உடனடியாக வீட்டின் பின்புறம் வசித்து வந்த காவலாளி ரமேஷை தேடி உள்ளார். காவலாளி குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளார்.

நகை கொள்ளை சம்பவம் தொடர்பாக நீலாங்கரை காவல் நிலையத்தில் மகேஷ் குமார் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்தில் போலீசார் சோதனை நடத்தி ஆய்வு செய்தனர். மேலும் தப்பி சென்ற நேபாள நாட்டை சேர்ந்த தம்பதியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News