தமிழ்நாடு செய்திகள்

VIDEO: ஊரையே கதறவிட்ட கரடியை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்

Published On 2025-05-01 16:23 IST   |   Update On 2025-05-01 16:23:00 IST
  • ஒரு வீட்டுக்குள் சென்று பதுங்கிய கரடி மீது மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
  • 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கரடி பிடிபட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் கொத்தூர்பேட்டராயன் பகுதியில் ஊருக்குள் புகுந்து 2 பேரை தாக்கிய கரடி 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பிடிபட்டது.

ஒரு வீட்டுக்குள் சென்று பதுங்கிய கரடி மீது மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர், 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் வனத்துறை அலுவலர்களால் வைக்கப்பட்ட கூண்டில் கரடி பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆந்திர வனப்பகுதியில் கரடியை திறந்துவிட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.  

Full View
Tags:    

Similar News