தமிழ்நாடு செய்திகள்

நெற்றியில் பொட்டு வைப்பது சங்கிகளின் அடையாளம்: கரை வேட்டி கட்டிக்கொண்டு வைக்க வேண்டாம்- ஆ.ராசா

Published On 2025-04-01 18:04 IST   |   Update On 2025-04-02 09:53:00 IST
  • நீங்களும் பொட்டு வைத்து, கயிறு கட்டுகிறீர்கள். சங்கிகளும் இதைத்தான் செய்கிறார்கள்.
  • யார் சங்கி, யார் திமுக-காரன் என வித்தியாசம் தெரியாமல் போய்விடும்.

நீலகிரி மாவட்டம் உதகையில் மாநில மாணவரணி கருத்தரங்கில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ. ராசா பேசும்போது கூறியதாவது:-

* கடவுளை வணங்க வேண்டாம் என கூறவில்லை. கடவுள் மீது எந்த கோபமும் இல்லை.

* நெற்றியில் பொட்டு வைப்பதும், கைகளில் கயிறு கட்டுவதும் சங்கிகளின் அடையாளம்.

* கரை வேட்டி கட்டிக்கொண்டு பொட்டு வைக்க வேண்டாம்.

* கரைவேட்டி கட்டிவிட்டால் நெற்றிப்பொட்டை அழித்துவிட்டு வெளியே வந்துவிட வேண்டும்.

* நீங்களும் பொட்டு வைத்து, கயிறு கட்டுகிறீர்கள். சங்கிகளும் இதைத்தான் செய்கிறார்கள்.

* யார் சங்கி, யார் திமுக-காரன் என வித்தியாசம் தெரியாமல் போய்விடும்.

* கொள்கை இல்லாமல் போனால் அந்த கட்சி அழிந்து போய் விடும்.

* அப்படி அழிந்து கொண்டிருக்கும் ஒரு கட்சிதான் அதிமுக.

இவ்வாறு ஆ. ராசா பேசினார்.

Tags:    

Similar News