தமிழ்நாடு செய்திகள்

கோடை வெப்பத்தால் முன்கூட்டியே தொடங்கும் இறுதித்தேர்வு

Published On 2025-03-30 13:46 IST   |   Update On 2025-03-30 13:46:00 IST
  • 1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 9-ந்தேதி இறுதித்தேர்வு தொடங்கி 21-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
  • பெற்றோரின் வேண்டுகோளை அடுத்து முதலமைச்சர் உத்தரவின் பேரில் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரிப்பதால் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான இறுதித்தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 9-ந்தேதி தொடங்குவதாக இருந்த இறுதித்தேர்வு முன்கூட்டியே ஏப்ரல் 7-ந்தேதி தொடங்குகிறது. தற்போது இறுதித்தேர்வை ஏப்ரல் 7-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரை நடத்தி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோரின் வேண்டுகோளை அடுத்து முதலமைச்சர் உத்தரவின் பேரில் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

முன்னதாக 1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 9-ந்தேதி இறுதித்தேர்வு தொடங்கி 21-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News