தமிழ்நாடு செய்திகள்
தருமபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு
- சிகிச்சை பலனின்றி ஜெயராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் கீழ் ராஜா தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 52). விவசாயி. இவர் கோழிப்பண்ணை நடத்தி வந்தார்.
இவர் தனது உறவினரிடம் கொடுத்த நில பத்திரத்தை மீட்டு தர கோரி கடந்த 4-ந்தேதி தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார்.
அப்போது அந்த வளாகத்தில் அவர் தனது உடலில் மண் எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் கருகிய அவரை போலீசார் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.