தமிழ்நாடு செய்திகள்

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Published On 2025-05-08 13:12 IST   |   Update On 2025-05-08 13:12:00 IST
  • சரியான திசையைத் தேர்ந்தெடுத்து, வாழ்வின் அனைத்து படிகளிலும் சிறக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
  • தேர்ச்சி பெறத் தவறியவர்கள் துவண்டுவிட வேண்டாம்.

சென்னை :

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள், உயர்கல்விக்கான விருப்பமிக்க, மற்றும் சரியான திசையைத் தேர்ந்தெடுத்து, வாழ்வின் அனைத்து படிகளிலும் சிறக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

தேர்ச்சி பெறத் தவறியவர்கள் துவண்டுவிட வேண்டாம்.

You haven't failed;

Your success is just

postponed for a while,

மீண்டும் நன்றாகப் புரிந்து படித்து,

துணைத் தேர்வை அணுகுங்கள்;

நிச்சயம் தேர்ச்சி அடைவீர்கள்!

நீங்கள் ஒவ்வொருவரும்

வெற்றியாளர்கள் தான்!

உங்களுக்கும் எனது Advance வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார். 

Tags:    

Similar News