தமிழ்நாடு செய்திகள்
சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
- சென்னை மாநகர் முழுவதும் சோதனை நடத்தப்பட்ட இடங்களில் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையின் முடிவில் தான் இது தொடர்பாக கூடுதல் தகவல்கள் தெரிய வரும்.
சென்னை:
சென்னையில் கே.கே.நகர், தியாகராயநகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். புரசைவாக்கம் பிளவர்ஸ் தெருவில் வசித்து வரும் அரவிந்த் என்பவர் வீட்டுக்கு இன்று காலையில் 2 வாகனங்களில் வந்த 8 அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகர் முழுவதும் சோதனை நடத்தப்பட்ட இடங்களில் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வெளிமாநிலங்களில் மருந்து நிறுவனத்தை நடத்தி வந்த இவர் சென்னையிலும் அதனை நடத்தி வருவதாகவும், கூறப்படுகிறது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை நடத்தி வரும் இந்த சோதனையின் முடிவில் தான் இது தொடர்பாக கூடுதல் தகவல்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.