தமிழ்நாடு செய்திகள்

பாதிக்கப்பட்ட பெண்ணை விமர்சிக்காதீர்! - கோவையில் பல வீடுகளில் சிசிடிவி வேலை செய்யவில்லை! - மாநகர காவல் ஆணையர்

Published On 2025-11-04 11:16 IST   |   Update On 2025-11-04 11:16:00 IST
  • கோவையில் 300 சிசிடிவிகளை ஆய்வு செய்து குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்துள்ளோம்.
  • பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை ஏர்போர்ட் அருகே மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் சுட்டுப்பிடிக்கப்பட்டது குறித்து காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* கோவையில் 300 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்துள்ளோம்.

* கோவையில் பல இடங்களில் வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை. பொதுமக்களும் அதனை கவனிக்க வேண்டும்.

* பாதிக்கப்பட்ட இளம்பெண் நல்ல உடல்நலத்துடன் உள்ளார்.

* பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

* பாதிக்கப்பட்ட பெண்ணை விமர்சிக்காதீர். எங்கும் எந்த நேரத்திலும் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு.

* தனிமனித உரிமைக்கு முக்கியத்துவம் அளித்து பாதிக்கப்பட்டவர்களை விமர்சிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News