தமிழ்நாடு செய்திகள்

அமித் ஷா முன்னிலையில் பாஜக-வில் இணைந்த திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்

Published On 2025-08-22 17:35 IST   |   Update On 2025-08-22 17:35:00 IST
  • பாஜக பூத் கமிட்டி மாநாடு அமித் ஷா தலைமையில் நெல்லையில் நடைபெற்றது.
  • திமுக-வின் ஊழல் பட்டியலை அமித் ஷா சுட்டிக்காட்டினார்.

அமித் ஷா தலைமையில் பாஜக பூத் கமிட்டி மாநாடு நெல்லையில் நடைபெற்றது. மாநாட்டு மேடையில் அமித் ஷா முன்னிலையில் திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தன்னை பாஜக-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்த மாநாட்டில் பேசிய அமித் ஷா "தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல், எல்காட் ஊழல், மணல் கொள்ளை ஊழல், இலவச வேட்டி சேலை திட்டத்தில் ஊழல். 100 நாள் வேலைத் திட்டத்தில் கூட திமுக-வின் ஊழல் செய்கிறார்கள். தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமையும்" என்றார்.

Tags:    

Similar News