தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் ரெயில் பாலத்தில் பழுது!

Published On 2025-04-06 15:44 IST   |   Update On 2025-04-06 15:44:00 IST
  • பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்தில் இன்று புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார்.
  • சிறிது நேரத்திலேயே பழுது ஏற்பட்டது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் ரயில் பாலம் சிறிது நேரத்திலேயே பழுதாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்தில் இன்று புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார்.

ஹைட்ராலிக் முறையில் செயல்படும் இந்தப் ரெயில் பாலம், கப்பல் செல்லும்போது செங்குத்தான நிலையில் 24 கயிறுகளைக் கொண்டு தூக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செங்குத்து பாலத்தை இறக்கும்போது பழுது ஏற்பட்டு பாலம் கோணலாக நிற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தொழில்நுட்ப கோளாறால் ஒரு பக்கம் ஏற்றமாகவும், மறுபுறம் இறக்கமாகவும் உள்ளதால், பாலத்தை கீழே இறக்கமுடியாத சூழல் ஏற்பட்டது. பழுதை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி பாலத்தை திறந்து வைத்த சிறிது நேரத்திலேயே பழுது ஏற்பட்டது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News